
இந்திய குடியரசு தலைவர்களில் மக்களால் அதிகம் கவரப்பட்டவர் திரு. அப்துல்காலாம் அவர்கள் மட்டுமே. இவரைத் தவிர வேறு யாரும் குடியரசு தலைவராக இந்த அளவுக்கு மக்களை கவர்ந்து இருக்க முடியாது. இவரது நடையும் பேச்சும் அனைவர் மனங்களிலும் இன்றும் நீங்காது இடம்பெற்றுக் கொண்ருக்கிறது. இவருக்கென ஒரு தனி பாணியை அமைத்துக்கொண்டு செயல்பட்ட விதமும் முப்படைகளிலும் காட்டிய ஆர்வமும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் நினைத்துப்பார்த்து பெருமை பட வேண்டிய ஒன்றாகும். முற்றிலும் அரசியல் சாயம் இல்லாது செயல்பட்டவர் இவர் என்பதை யாராலும் மறுப்பதற்கில்லை. இப்படி ஒரு குடியரசு தலைவரை இனி இந்தியா காணுமா என்பது சந்தோகமே? தன்னம்பிக்கை இல்லாதவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இவரது அக்கினிச் சிறகுகள் இவருடைய சாதனைகள் வேதனைகள் எல்லாம் ஒவ்வொரு மாணவனுக்குமான பாடமாக இருக்கும். குடியரசு தினம் கொண்டாடும் இந்த வேளையில் ஒரு நல்ல குடிமகனை அடையாளம் கண்டுகொண்டதில் பெருமிதம் அடைகிறோம்.
அன்புடன்
ரா.கிரிஷ்
No comments:
Post a Comment